திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த ஒரு பெண் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்thu நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் வத்தலகுண்டை சேர்ந்த தனலட்சுமி(50) என்பது தெரியவந்தது. தனலட்சுமி மகள் பானுபிரியா கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பேத்தி திவ்யா தனலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேத்தி திவ்யாவை ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் திவ்யாவை மீட்டு தரவில்லை. இதனால் மன உளைச்சலில் தனலட்சுமி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. அவருக்கு அறிவுரை கூறி போலீசார் மனு கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.