தமிழ், தெலுங்கு மலையாள மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழில் மாரி 2, என்ஜிகே போன்ற சில படங்களில் நடித்துள்ளார். நடிகை சாய் பல்லவிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் குவியும் நிலையில் தற்போது தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கமர்சியல் படங்கள் மற்றும் நடிகர்களுடன் மார்டன் உடையில் நடனம் ஆடுவது போன்ற படங்களை நடிகை சாய் பல்லவி தவிர்த்து வருகிறார். இது குறித்து ஒரு பேட்டியில் நடிகை சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டது.

அவர் ஜார்ஜியாவில் நான் படித்துக் கொண்டிருந்தபோது டாங்கோ நடனத்திற்கு ஸ்லிட் டிரெஸ் உடையில் நடனம் ஆட வேண்டி இருந்தது. என்னுடைய முதல் படமான பிரேமம் வெளியான பிறகு நான் ஆடிய நடன வீடியோ இணையத்தில் வெளியானது. அப்போது மக்கள் என்னை பாராட்டுவதற்கு பதிலாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். அந்த சமயத்தில் தான் நான் இனி குட்டை பாவாடை அணிந்து கொண்டு படங்களில் நடிக்க கூடாது என முடிவு எடுத்தேன். ஒருவரின் உடையை வைத்து அவர்களின் குணத்தை மதிப்பிட முடியாது என்று கூறியுள்ளார்.