கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் திலுள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 46 மாணவர்கள், 6 ஆசிரியர்கள் உட்பட 57 பேர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாதேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது சில மாணவர்கள் மாலையில் நீராட கடலுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால், ஷர்வந்தி(15) என்ற மாணவி நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

அதோடு திக்ஷா, லாவண்யா, வந்தனா ஆகிய 3 மாணவிகள் கடலுக்குள் சென்ற பிறகு காணாமல் போய்விட்டனர். இதைத்தொடர்ந்து யஷ்தா, விக்ஷனா, லிபிகா ஆகிய 3 மாணவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு பணி அதிகாரிகள் காணாமல் போன மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அலட்சியப் போக்கின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.