பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 118 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களை எவ்வாறு கற்பிக்க வேண்டும், கற்றல், கற்பித்தல் துணை கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகள் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மேலும் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், முதுநிலை விரிவுரையாளருமான வசந்தி வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன் கருத்தாளர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!
Related Posts
“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…
Read moreமாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…
Read more