திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷை அவரது மனைவி பவானி கண்டித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்றும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சுரேஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் சுரேஷ் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.