ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய பயனாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாக தடுக்க இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI) ஒரு சிறப்பு சேவையைக் கொண்டிருக்கிறது. ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவேட்டை (NCPR) TRAI துவங்கியுள்ளது.

அதை ஒரு முறை மட்டும் ஆன் பண்ணால் போதும், DND 3ஆம் தரப்பு வணிக அழைப்புகளை தடுக்கும். உங்களது வங்கியிலிருந்து வரும் sms, ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் சேவைகள், மூன்றாம் தரப்பு தனிப்பட்ட அழைப்பு ஆகியவற்றைத் தடுக்காது என தேசிய நுகர்வோர் விருப்ப பதிவேடு உறுதியளிக்கிறது.