சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.