கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பிரசாத் என்பவர் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென இவரது ஸ்மார்ட் போன் வெடித்துள்ளது. இதில் பிரசாத்தின் கால் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை எடுத்து ஸ்மார்ட் போன் வெடித்ததால் தான் இந்த நிலை என்பதால் ஸ்மார்ட் போன் கடை தான் மருத்துவ செலவை ஏற்க வேண்டும் என்றும் இதனை மறுத்தால் வழக்கு தொடர இருப்பதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.