தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கலை கல்லூரி அருகே பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பாபு பட்டறையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது வெளியே வைத்திருந்த 9 இரும்பு ஜன்னல்கள் காணாமல் போனது தெரியவந்தது.

அவற்றை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் இரும்பு ஜன்னல்களை திருடியது தெரியவந்தது. இதனால் போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.