கடந்த வருடம் காசியில் நடந்த தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் கலந்துகொண்டு யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த அம்மாணவிக்கு வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நீங்கள் ஆர்வத்தோடு பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற உங்களின் முயற்சிகள் பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் மனதில் உள்ள ஆழமான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்து, நமது தாய் நாட்டை மெய்யாகவே தனித்துவப்படுத்தும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.