தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு சித்தா படத்திற்காக தனியார் நிறுவனம் விருது கொடுத்தது.

இந்த விருது வழங்கும் விழாவின்போது நடிகர் சித்தார்த் பேசியதாவது, மிருகம் என்று தலைப்பு வைத்த படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால் சித்தா படத்தை பார்க்கும்போது தொந்தரவாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். சித்தா படத்தை பார்க்கும்போது ஏற்படுவது தொந்தரவில்லை. வெட்கமும் குற்ற உணர்வு தான் அது. பரவாயில்லை. போகப்போக சரியாகும் என்று கூறியுள்ளார்.