சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய பல்வேறு கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். வாகன கடன், வீட்டுக் கடன் போன்ற கடன்களை குறைந்த வட்டியில் பெறலாம். ஆனால் வங்கிகள் பல்வேறு கடன்களுக்கான வட்டிகளை குறைக்கும் போது பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதமும் குறைக்கப்படும். இது முதலீடு செய்பவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அதில் முதலீடு செய்தால் குறைந்த வருமானமே கிடைக்கும். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி அதன் பிக்சட் டெபாசிட் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் 3 கோடிக்கும் குறைவான வைப்பு தொகைகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் வாடிக்கையாளரின் காலம் மற்றும் வகை பொருத்து மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து காலகட்டங்களிலும் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படும். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக ரெப்போ ரேட் விகிதங்களை தளர்த்தும் ரிசர்வ் வங்கியின் முடிவால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் நாட்களில் பல வங்கிகள் தங்களுடைய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.