கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த வகையில் விருதாச்சலத்தை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர், அங்கு டியூஷன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று டியூஷனுக்கு வந்த மாணவிக்கு, வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் அழுதுக் கொண்டே கூறினார். இதைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.