நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான”  படம் சென்ற மாதம் 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். பதான் படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்னதாக பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் அதுவே அப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது.

இந்நிலையில் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான்-தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசப்பட்டது. நடிகர் ஷாருக்கானுக்கு மேடையில் வைத்து தீபிகா படுகோன் முத்தம் கொடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தீபிகா படுகோன் உடனான அவரது கெமிஸ்ட்ரி தொடர்பான கேள்விக்கு ஷாருக்கான் “என்னையும் தீபிகாவையும் உங்களுக்கு தெரியும்.

காதல், கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது ஆகியவற்றுக்கு ஒரு சாக்கு வேண்டும். ஆகவே தாங்கள் என்னிடம் எந்த கேள்வி கேட்டாலும், நான் தீபிகாவின் கையை முத்தமிடுவேன். அதுவே எனது பதில் ஆகும் என ஷாருக்கான் தெரிவித்தார். அதன்பின் ஷாருக்கான் உடனான அவரது கெமிஸ்ட்ரி பற்றி கேட்டபோது தீபிகா கூறியதாவது, சுவாரஷ்யமாக இருந்தது. எனினும் கதாபாத்திரங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் பகிர்ந்துகொள்வது  அன்பும், நம்பிக்கையும். அவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என கூறினார்.