சீனா-ரஷ்யா இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்கரைன்-ரஸ்யா போர் ஓராண்டு எட்டிய நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சீன அதிபரின் ரஷ்ய வருகைக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஸ்யா சென்றுள்ள சீன வெளியுறவு துறை அமைச்சர் ஹிவாங்கி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது சீன அதிபரின் வருகைக்கு காத்திருக்கிறோம் எனவும் இரு தரப்பு வர்த்தகம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது எனவும் புதின் தெரிவித்துள்ளார்.