நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு,பொம்மி யானைகளை மையமாக வைத்து தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வந்து குட்டி யானைகளை பராமரித்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்து பாராட்டியுள்ளார்.

இதனால் நாடு முழுவதும் முதுமலையில் இருக்கும் குட்டி யானைகள், பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோர் மிகவும் புகழ் பெற்றனர். தற்போது ஏராளமான பொதுமக்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்று பொம்மன்-பெள்ளி தம்பதியினரை சந்தித்து செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.