திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு குறித்து அறிந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தோட்டக்கலைதுறையினர் மாவட்டத்திற்கு தேவையான காய்கறிகளை நமது மாவட்டத்திலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் ஏலகிரி மலை, ஜவ்வாது மலை பகுதியில் மிளகு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.. அந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், துணை இயக்குனர்கள் பாத்திமா, ராமசந்திரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி இயக்குனர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.