நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பலரின் டுவிட்டர் கணக்குகள் என்றும் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு சீமான் ஆதரவு கொடுத்து பேசியதால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் படிதான் சீமான் உட்பட சிலரின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார். சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் துறை தற்போது சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் பொய் செய்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரித்துள்ளது.