தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த இரவு 10 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போதைப்பொருள் எதுவும் விநியோகிக்கக்கூடாது. காவல்துறையின் நிபந்தனைகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.