தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர் இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரஞ்சித்(22),‌ இசக்கிமுத்து(21) என்பது தெரியவந்தது. மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.