தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி உள்ளார்.

அப்போது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு பரிமளா அதிர்ச்சியடைந்தார். கூட்ட நெரிசலை சில பயன்படுத்தி பேருந்தில் யாரோ பரிமளாவின் நகையை பறித்தது தெரியவந்தது. இதுகுறித்து பரிமளா தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.