சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தனது நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் திருவள்ளுவர் சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி மூன்று மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று யோகேஸ்வரன், தர்ஷன் ஆகிய இருவரையும் மீட்டனர். ஆனால் அருளை கண்டுபிடிக்க இயலவில்லை. நேற்று இரண்டாவது நாளாக அருளைத் தேடும் பணி நடைபெற்றது. ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. மூன்று மாணவர்களும் பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வந்ததும், அதன் பிறகு கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கியதும் தெரியவந்தது.