நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி பல புதிய திட்டங்களையும் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது.

Sbi வங்கி தனது லாக்கர் தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது. லாக்கர் வைத்திருப்பவர்கள் உடனடியாக அதில் கையெழுத்திட வேண்டும் என்றும் பங்கே நேரில் வந்து அணுக வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஜூன் 30-ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற எஸ்பிஐ வங்கி முயற்சித்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனே வங்கி கிளையை அணுகவும்.