மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான போக்குவரத்து நிறுவனமான கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், கடந்த 2017-ம் வருடம் இந்தியாவின் 5வ-து மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. கடந்த சில காலங்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனமானது கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.

அமெரிக்காவின் Pratt & Whitney விமான நிறுவனம், என்ஜின்கள் டெலிவிரி செய்யாததால் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்கள் இயங்காததால் ஏறத்தாழ ரூ.10,800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு, மே 30-ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.