இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சர்வோத்தம் என்ற வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இதில் இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதுவே மூத்த குடிமக்களுக்கு 7.90% ஆகும். ஓராண்டுக்கு முதலீடு செய்வோருக்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். இதில் குறைந்தபட்சம் 15 லட்சம் முதலீடு செய்ய முடியும். முதிர்ச்சி அடைவதற்கு முன்பு பணத்தை எடுக்க முடியாது.