பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கன்னத்தை தெரிவித்திருக்கிறார்.

நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கல் குவாரிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரக் கூடிய நிகழ்வு  நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பாஜக உடைய ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு நபர்கள் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டார்கள். குறிப்பாக கல்குவாரி டென்டரில் திமுகவினரை தவிர வேறு யாரும் பங்கேற்க கூடாது என்று அந்த தாக்குதல் சம்பவம் என்பது நடைபெற்றதாக புகார் இருந்தது.

இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த நிகழ்வு தொடர்பாக திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு கண்டனம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

அரக்கர்கள் – அசுரர்கள் – கிங்கர்கள் என்று புராணக் கதைகளில் கேள்வி பட்டு இருக்கிறோம். நாம் யாரும் அவர்களை கண்டதில்லை. அந்தக் குறையை போக்க ஆளும் திமுகவினர் அவதாரம் எடுத்து தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சம். ஐந்தாண்டுகளுக்கு தங்களுக்கு சேவை புரிய மக்கள் வாக்களித்தார்கள் என்பதை திமுகவினர் மறந்துவிட்டு,  மாநிலமே தங்களது சொந்தமாகிவிட்டது போல் ஆட்டம் போடுவதும், அராஜகத்தில் ஈடுபடுவதும்,  அதை இவர்களுக்கெல்லாம் தலைவர் என்று  மார்தட்டிக் கொள்ளும் திரு மு.க ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கல் குவாரிக்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து , கல்குவாரி டெண்டர்களை தங்களுக்கே தரவேண்டும் என்றும்,  திமுகவினரை தவிர வேறு யாரிடமும் ஒப்பந்த புள்ளி தரக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக அனைத்து ஊடகங்களிலும்,  செய்திகள் வந்துள்ளன.

திமுகவினரின் கோரிக்கை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குனர், அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த வன்முறையை தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்களையும் திமுக தொண்டர்கள் தாக்கியதாகவும்,  ஒப்பந்த புள்ளி வழங்க வந்தவர்களை திமுகவினர்  அடித்து விரட்டியதாகவும் இன்றைய நாளிதழலில் திமுகவினரின் அராஜகங்கள் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

இத்தகைய களோபரம்  நடந்தும் காவல்துறை உயர் அதிகாரிகளோ,  மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வராதது, இவர்களின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சென்னையில் ஆளுநர் மாளிகையில்  பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரிகள்.  பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், பெரம்பலூரில் ஆளும் கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிட தயாரா ?

”பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த திராவக மாடல் ஆட்சியாளர்களின் கரங்களில் இன்றைக்கு தமிழகம் மக்கள் சிக்கி,  மக்கள் அவதியுறுவது கொடுமையிலும் கொடுமை. சட்டமாகவும், சத்தமாகவும் பேசினால் மட்டும் போதாது; சட்டம் பொதுவானதாகவும்,  சப்தம் உண்மை உள்ளதாகவும்இருந்தல்  அவசியம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரையை இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்.

30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை  வலியுறுத்துவதோடு, திமுகவினர் அதிகார மமதையில் தொடர்ந்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி விட்டது. இத்தகைய வன்முறை செயல்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களை கட்டுப்படுத்த தவறிய திமுகவிற்கு வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.