டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் “சந்திரமுகி 2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு போன்றோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் பரவியது. இந்த நிலையில் இதுகுறித்து இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு பங்கேற்று முடித்துக்கொடுத்துவிட்டார். சந்திரமுகி-2 சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.