மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இந்த கோவிலில் தினசரி திருமண வைபங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் செந்தில் தன் 70-வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற இருக்கிறது. இதற்காக செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும் குடும்பத்தினருடன் அந்த கோவிலுக்கு வந்துள்ளார்.

இரவு கஜ பூஜை, கோ பூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டு காலயாகசாலை பூஜையில் அவர்கள் பங்கேற்று உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஷோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. அதோடு இன்று காலை 2ஆம் காலயாகசாலை பூஜைகள் நடந்து பீமரதசாந்தி என்று அழைக்கப்படும் 70-வது திருமண நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.