ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் வந்தாலும் சனி பிரதோஷம் மகா பிரதோஷமாக கருதப்படுகிறது. ஒரு சனி பிரதோஷம் அன்று வழிபாடு செய்தால் வருடத்தில் அனைத்து பிரதோஷ தினங்களிலும் வழிபாடு செய்யும் பலன் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்வதன் மூலம் தோஷங்கள் நீக்கி பூரண மகிழ்ச்சியும் சகல நன்மைகளையும் தர முடியும்.

 

இவ்வுலகில் நாம் வாழ்வதே நமது கர்ம வினைகளை கழித்து பரம்பொருளை நோக்கி செல்வதற்காக தான். பிரதோஷ வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் நமது கர்ம வினைகளை எளிதில் நீக்கி சிவபெருமானை நோக்கி பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இன்றைய சனி பிரதோஷத்தில் மாலை சிவபெருமானை தரிசித்து விட்டு அங்கிருக்கும் கால பைரவரையும் சனிபகவானையும் வழிபடுவதால் சனி பகவான் மற்றும் சனி தோசத்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.