தனுஷ் குறித்து பரவிய வதந்திக்கு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் முற்று புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் தனக்குள் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பாடகர் என பன்முக தன்மைகளை கொண்டுள்ளார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தின் படபிடிப்பில் தனுஷ் கோபமாக வெளியேறியதாக செய்திகள் சோசியல் மீடியாவில் பரவியது. இந்த நிலையில் இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். தனுஷின் படபிடிப்பு இரண்டு நாட்கள் இல்லையாம். அவருக்கு ஓய்வு கிடைத்ததன் காரணமாக சென்னைக்கு வந்தாராம். அவருக்கும் பட குழுவினருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.