தமிழகத்தில் ஆர் டி இ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது  மட்டுமில்லாமல் அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.