செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, வடநாட்டுல குறிப்பா….  தோழர் உதயநிதியின் முழு பேச்சை அவங்க போடல. அந்த பேச்சிலயே திரிச்சி அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா….  இந்து மதத்துக்கு எதிரானவர், இந்து  மதத்தை பின்பற்றுவர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்கள். குறிப்பாக   திமுக, திமுக கூட்டணில இவங்க எல்லாம் இருகாங்க என சொல்லி   தவறான அவதூறு பிரச்சாரம் நடை பெற்று கொண்டிருக்கும் பொழுது….

வங்க முதலமைச்சர் மம்தாவா இருக்கட்டும்,  அரவிந்த் கெஜர்வலா இருக்கட்டும்… இது சம்மந்தமா கருத்து சொல்லிருக்காங்க… இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக….  அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு அலை பெருகிவிடக்  கூடாது என்பதற்காக உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். உதயநிதி பேச்சுக்கு  அயோத்தில ஒரு சாமியார் தலை எடுக்கணும் சொல்லிருக்காரு பாத்தீங்களா… கருத்துக்கள், விவாதங்கள் இருக்கலாம்.

அதே நேரத்துல தலை எடுக்கணும் சொல்லி இந்த மாதிரி வன்முறையை தூண்டுறதோ இருக்க கூடாது என தான் நான் சொல்லுறேன்… ஆப்கானிஸ்தான்ல தாலிபான்கள் என்ன சொல்லுறாங்க ? யாரும் ஒரு கருத்து  சொல்லும் போது…. அதாவது  மதத்தை பத்தி கிடையாது…. பெண்கள் விடுதலையை பத்தி பேசுனாலே  தலை எடுக்கணும் சொல்லுறாங்க,  ஆப்கானிஸ்தான்ல…  அது போன்றது தான்  ஒப்பிடுகின்றேன் ஆர்.எஸ்.எஸ் தாலிபான் அமைப்பை என விளக்கம் அளித்தார்.