சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 39 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.100 லஞ்சம் வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற முன்னாள் மத்திய பிரதேச மாநில சால்வே தகவல் கழகத்திலான பில் உதவியாளர் ஜகேஸ்வர் பிரசாத் அவதியா, தற்போது சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2004-ல் ராய்ப்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிபெற்றுள்ளார்.
Justice delayed is Justice denied.
This 89-year-old man (Jageshwar Singh) spent 39 years in jail for a fake ₹100 bribery case. After 39 years, the court finally declared him innocent.
He lost his wife, his children were thrown out of school because he couldn’t pay the fees,… pic.twitter.com/C20FB2S5gs
— Nalini Unagar (@NalinisKitchen) September 24, 2025
“>
வழக்கின் தகவலின்படி, 1986 அக்டோபர் 24-ஆம் தேதி, அவதியா மீது ரூ.100 லஞ்சம் கேட்டதாகவும், அதை வாங்கும் போது கைது செய்யப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு விசாரணையில், புகாராளரின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவதியா தனக்கு அதிகாரமில்லாத நிலையில் பணம் கேட்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், மேலதிகாரியின் ஒப்புதல் பெறுவதற்கான கோரிக்கை நவம்பர் 19-ஆம் தேதியில் தான் அனுப்பப்பட்டது என்பதும், புகார் நாள் மற்றும் நடவடிக்கைகளுக்கிடையே தெளிவான முரண்பாடுகள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர் பிபூ தத் குரு, உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, “குற்றச்சாட்டை ஆதரிக்கும் போதுமான சான்றுகள் இல்லாத நிலையில் தண்டனை விதிப்பது சரியல்ல” என்று வலியுறுத்தினார். தீர்ப்பு பிறகு பேசும் அவதியா, “நீதியை இந்த அளவுக்கு தாமதிக்க முடியாது. இப்போது ஓய்வூதியம் கிடைக்கும் என அரசிடம் கண்ணியமாக கோருகிறேன்” என்றார்.
