அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்தனர். அதன்பிறகு ஸ்ரேயா சரண், அஜய் தேவகன், ஆலியா பட் போன்ற பல முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அதன் பிறகு ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்த நிலையில் ஆஸ்கார் ரேஸின் இறுதி பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்றது. இந்திய ரசிகர்கள் அனைவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது விருது கிடைத்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.