ஹரியானாவைச் சேர்ந்த சாகர் குமார் (Sagar Kumar), ஐஐடி (IIT) அல்லது என்ஐடி (NIT) போன்றப் பெரிய நிறுவனங்களில் படிக்காமல், உலகத் தலைசிறந்தத் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் (Google) வேலை கிடைத்துப் பலருக்கு ஊக்கமளிக்கும் இளைஞராக உருவெடுத்துள்ளார்.
ஹரியானாவின் குரு கிராமத்தைச் சேர்ந்த சாகர், ஷார்தா பல்கலைக்கழகத்தில் (Sharda University) 2021-இல் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்.
பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, சாகர் தனதுத் தொழில் வாழ்க்கையைத் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹3.3 லட்சம் என்றச் சம்பளத்தில் தொடங்கினார்.
மூன்று வருடங்கள் டிசிஎஸ்ஸில் பணிபுரிந்த இவர், 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் கூகுள் மற்றும் வால்மார்ட்டில் கூட நிராகரிக்கப்பட்டார்.
எனினும், தனது பலங்களில் கவனம் செலுத்தி, DSA மற்றும் போட்டி நிரலாக்கம் (Competitive Programming) போன்ற பலவீனங்களை மேம்படுத்தினார்.
விடாமுயற்சியுடன் உழைத்ததன் விளைவாக, மார்ச் 2025-இல் ஒரு நண்பர் மூலம் விண்ணப்பித்தபோது, அனைத்துச் சுற்றுகளிலும் வெற்றி பெற்று கூகுளில் மென்பொருள் பொறியாளர் (Software Engineer) பணியைப் பெற்றார். இவரதுச் சம்பளம் 500% உயர்ந்து, ஆண்டுக்கு ₹40 லட்சம் என்றச் சாதனையைப் படைத்துள்ளார்.
