சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

தற்போது  2023 ஐபிஎல் 16வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 24வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த இரு அணிகளும் ஏறக்குறைய ஒரே நிலையில் உள்ளன. இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அபார வெற்றி பெற்றது. அதேசமயம் கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே போராடி தோற்றது.

இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் ஆட தயாராக உள்ளது.சென்னை அணியில் மகலாவுக்கு பதிலாக பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்..

சிஎஸ்கே அணி :

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பாத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), துஷார் தேஷ்பாண்டே, மகிஷ் திக்ஷனா, மதீஷா பதிரனா.

ஆர்சிபி அணி : 

பாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, வெயின் பார்னெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், வைஷாக் விஜய்குமார்.