தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியில் இறங்காமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இவருடைய நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இப்போது அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான விராட பருவம், கார்கி ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை அப்படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாய் பல்லவியும் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிக்க தொடர்ந்து 2 வருடங்கள் அவர் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக தெலுங்கு திரையுலகில் பேசுகின்றனர். இந்த 2 வருடங்களும் வேறு படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்று கூறுகின்றனர்.