கடந்த 2 நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை டைரக்டு செய்துள்ளார். முன்னதாக அஜித் நடிக்கும் 62-வது படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் படத்திலிருந்து நீக்கி விட்டனர்.

இதையடுத்து அவருக்கு பதில் அஜித் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதன் காரணமாக விரக்தியடைந்த விக்னேஷ் சிவன் சமூகவலைத்தளத்தில் தத்துவ கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அதாவது, “பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விடவும் அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இந்நிலையில் இவரது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி இருக்கின்றனர். இதன் காரணமாக கடுப்பான விக்னேஷ் சிவன் “என்  டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இச்செயல் பயத்தையும் எரிச்சலையும் தருகிறது” என கூறியு ள்ளார்.