தென்னிந்திய திரைப்படத்தில் ஒரு காலத்தில் வில்லனாக பிரகாசித்தவர் தான் பொன்னம்பலம். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பிலிருந்து அவரின் உறவினரும் இயக்குனருமான ஜெகநாதன் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் அவர் மீண்டும் உயிர் பெற்றார். பொன்னம்பலத்திற்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் உடல் நலம் தேடி வருகின்றார். இந்நிலையில்தனது உடல் நலத்தை விசாரித்த நடிகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறினார். மேலும் தனது தந்தையின் மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகனே பீரில் விஷம் கலந்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.