உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவார்.

அதேபோன்று யோகி ஆதித்யநாத்தும் தீய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் அவரது ராம ராஜ்ஜியத்தின் கீழ் உத்திர பிரதேச மாநிலத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.