பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதர சகோதரிகளை போன்றவர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான நட்பு அனைவருக்கும் தெரியும். பாஜகவும் காங்கிரசும் கொள்ளையடித்து மக்களை ஏமாற்றியவர்கள். எனவே மாநில வளர்ச்சியின் அவசியத்திற்கு மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.