கும்பகோணம் அருகே மேலவிசலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மோகன்தாஸ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராமச்சந்திரனுக்கு (வயது 20) திருமணம் ஆன நிலையில் தனக்கு தனியாக வீடு வேண்டும் என தந்தையுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் கறி குழம்பு வைத்துள்ளனர். அப்போது மோகன்தாஸ் தன்னுடைய மகனுக்கு இல்லாமல் கறி குழம்பை விரும்பி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

தனக்கு கறி குழம்பு இல்லாததால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன் தன் தந்தையை கோபத்தில் கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதனால் தன் மகனிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்தாஸின் முதுகில் இருந்த கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இதற்கிடையில் ராமச்சந்திரன் தலைமறை வாகிவிட்டார். மேலும் தற்போது அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.