கமல் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தபோது சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் இப்படத்தை லைகா நிறுவனம் கிடப்பில் போட்டது. இதனால் ராம்சரணின்  திரைப்படத்தை இயக்க தயாராகினார் ஷங்கர். அதன்பின் அவருக்கும் லைகா நிறுவனத்திற்கும்  இடையில் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்ற வரை சென்றது.

அப்போது ஷங்கருக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வந்தார். அப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த போது ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டதை அடுத்து இந்தியன்- 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியன்-2, ராம்சரண் -15 போன்ற 2 திரைப்படங்களையும் மாறி மாறி இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதற்கிடையில் வேகமாக நடந்து வந்த ஆர்சி -15 படப்பிடிப்பு இப்போது தாமதமாகி வருகிறது. இதன் காரணமா ஆர்சி-15 படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் முடிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால் தற்போது அப்படத்தை 2024ம் வருடம் சங்கராந்திக்கு வெளியிட தயாரிப்பாளர் தில்ராஜு முடிவு செய்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.