கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்திலு ள்ள வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ கேப்ரியல். இவருக்கு 16 வயதில் நயன்மரியா என்ற மகள் இருந்தார். இவர் வாழத்தோப்பு பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் நயன்மரியா புரோட்டா சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாம்மை(Allergy) காரணமாக இடிக்கி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நயன்மரியா சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்.10) பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருந்து உள்ளது. இதன் காரணமாக  நயன்மரியா அதற்கென்று சிகிச்சை பெற்று உள்ளார். இதையடுத்து தனக்கு ஓரளவு அந்த பிரச்னை நீங்கி விட்டதாக எண்ணி, அவர் புரோட்டா சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.