பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று பகல் 2.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜிகே வாசன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என் நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் வரவேற்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.