பொது வருங்கால வைப்பு நிதியில்(PPF) பணத்தை முதலீடு செய்வோர் தற்போது அரசாங்கத்திடம் இருந்து பெரிய பலனை பெறுவர். இத்திட்டம் தொடர்பாக அரசு பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PPF சந்தாதாரர்கள் இத்திட்டத்தில் 7.1 சதவீத வட்டியின் பலனை பெறுவீர்கள். அதோடு இதில் கூட்டு வட்டியின் (காம்பவுண்ட் இண்ட்ரஸ்ட்) பலன் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு. வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

இது வருகிற மார்ச் 31 ஆம் தேதியன்று செலுத்தப்படும். அதன்படி, இந்த முறை மார்ச் 31ம் தேதி அரசிடமிருந்து உங்கள் கணக்கில் பெரிய தொகை வரப்போகிறது. மாதந்தோறும் 5ம் தேதி வட்டி கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் ஒரு நபர் 500 ரூபாய்கான முதலீட்டிலிருந்து துவங்கலாம். அதேநேரம் நிதியாண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம்.