தபால் நிலையங்களில் மக்கள் பலரும் கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பல்வேறு திட்டங்களில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளில் மாற்றம் வந்திருக்கிறது அதாவது மத்திய அரசு தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் மூன்று மாற்றங்களை கொண்டு வந்துள்ளது அதன்படி முதலாவது கணக்கு வைத்திருப்பவருடைய எண்ணிக்கையில் மாற்றம் வந்துள்ளது அதிகபட்சமாக இரண்டு கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.

இரண்டாவது ஆக கணக்கு விண்ணப்பத்திலிருந்து பணம் எடுப்பதை படிவம் இரண்டிலிருந்து படிவம் மூன்றுக்கு மாற்றியுள்ளது இதன் கீழ் பாஸ்புக்கை காட்டி கணக்கிலிருந்து குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் எடுக்கலாம் மூன்றாவதாக பத்தாவது நாள் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கணக்கில் இருக்கும் மிக குறைந்த இருப்பிற்கு ஆண்டிற்கு நாலு சதவீதம் வட்டி விதிக்கப்படும் அத்தகைய வட்டி ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் கணக்கிடப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படும் இதன் கீழ் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அந்த கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவருடைய கணக்கில் வட்டி வழங்கப்படும்.