இந்திய போஸ்ட் ஆபீஸில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1899 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பல்பணி ஊழியர்கள் பணிக்கு பத்தாம் வகுப்பு, தபால்காரர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு, தபால் உதவியாளர் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும் எனவும் இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் dopsportsrecritment.cept.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.