கோவையைச் சேர்ந்த குழந்தைகள் பெண்கள், கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எனக்கு மேல் அதிகாரியாக வேலை பார்த்த பெண் இன்ஸ்பெக்டர் பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இதனால் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி 18 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வேலைக்கு திரும்பினேன். இது தொடர்பாக 3 முறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அந்த இன்ஸ்பெக்டர் என்னை அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். குறிப்பாக தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குகின்றனர். எனவே இந்த பணியில் இருந்து நான் விலகி கொள்கிறேன்.

எனக்கு அரசு வழங்கிய சீருடை மற்றும் இதர பொருட்களை ஒப்படைத்து விட்டேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, நஸ்ரியாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு துணை கமிஷனர் சந்தீஷ் புகார் மீது விசாரணை நடத்துவார். விசாரணைக்கு பின்னரே ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.