கோயம்புத்தூர் மாவட்டத்தில் 120 அடி கொள்ளளவு உடைய ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை அமைந்துள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் போலீசார் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆழியாறு, மயிலாடுதுறை பகுதி ஆற்று படுகைகள் மற்றும் அணைக்கட்டுகளில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆழம், சுழல் இருக்கும் இடம் தெரியாமல் குளிப்பதால் துயர சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அணைக்கட்டு பகுதியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.